2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் பந்தை சேதப்படுத்தியதாக அமெரிக்க வீரர் குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் பந்தை சேதப்படுத்தியதாக அமெரிக்க வீரர் ரஸ்டி தெரான் குற்றம்சாட்டியுள்ளார்.

News image
- படம் | AP
Updated On :7 ஜூன் 2024, 10:00 am

DIN

பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் பந்தை சேதப்படுத்தியதாக அமெரிக்க வீரர் ரஸ்டி தெரான் குற்றம்சாட்டியுள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று (ஜூன் 6) நடைபெற்றது. இந்தப் போட்டியில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அமெரிக்க அணி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் பந்தை சேதப்படுத்தியதாக அமெரிக்க வீரர் ரஸ்டி தெரான் குற்றம்சாட்டியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது: புதிதாக மாற்றப்பட்ட பந்தை பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் தனது கட்டை விரல் நகத்தினால் சேதப்படுத்தியது தெளிவாக தெரிந்தது. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என இருக்கப் போகிறோமா? எனத் தெரிவித்துள்ளார்.

நேற்றையப் போட்டியில் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் 4 ஓவர்கள் வீசி 37 ரன்கள் விட்டுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.