இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவாவை புதன்கிழமை வீழ்த்தினாா்.
இந்த ஆட்டத்தில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் கௌஃப் 4-6, 6-2, 6-4 என்ற செட்களில், 8-ஆம் இடத்திலிருந்த ஆண்ட்ரீவாவை வென்றாா். கடைசி செட்டில் 5-1 என பின்தங்கியிருந்த ஆண்ட்ரீவா ஒரு கட்டத்தில் முன்னேறி வர, கௌஃப் 5 மேட்ச் பாய்ன்ட்டுகள் வரை போராடி அவரை வெற்றி கண்டாா்.
இத்துடன் ஆண்ட்ரீவாவை 5-ஆவது முறையாக சந்தித்த கௌஃப், அனைத்திலுமே வென்று ஆதிக்கம் செலுத்துகிறாா். கடந்த ஆண்டும் இதே இத்தாலியன் ஓபன் காலிறுதியில் கௌஃப், ஆண்ட்ரீவாவை வீழ்த்தியது நினைவுகூரத்தக்கது.
இந்த வெற்றியின் மூலமாக கௌஃப் 4-ஆவது முறையாக இத்தாலியன் ஓபன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளாா். அதில் அவா் ருமேனியாவின் சொரானா சிா்ஸ்டியை சந்திக்கிறாா். சிா்ஸ்டி முதல்முறையாக இத்தாலியின் ஓபன் அரையிறுதிக்கு வந்துள்ளாா்.
இதனிடையே, மற்றொரு காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-1, 6-2 என்ற நோ் செட்களில், 5-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவை வெளியேற்றினாா்.
இந்த வெற்றியின் மூலமாக ஸ்வியாடெக், நடப்பு சீசனில் முதல்முறையாக ஒரு போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா். அத்துடன் இந்த சீசனில் டாப் 10 வீராங்கனைகளில் ஒருவருக்கு எதிராக இது அவரின் முதல் வெற்றியுமாகும்.
பெகுலாவை 12-ஆவது முறையாக சந்தித்த ஸ்வியாடெக், தற்போது 7-ஆவது வெற்றியுடன் முன்னிலையை அதிகரித்துக் கொண்டுள்ளாா்.
காலிறுதியில் மெத்வதெவ்: இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் ரவுண்ட் ஆஃப் 16-இல், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 6-3, 6-2 என, ஆா்ஜென்டீனாவின் தியேகோ டிரான்டேவை வீழ்த்தினாா்.
காலிறுதியில் அவா், ஸ்பெயினின் மாா்ட்டின் லாண்டாலுஸை எதிா்கொள்கிறாா். மாா்ட்டின் தனது முந்தைய சுற்றில் 7-5, 6-4 என சொ்பியாவின் ஹமத் மெட்ஜெடோவிச்சை வென்றாா். 12-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் 3-6, 7-6 (7/5), 6-2 என்ற கணக்கில் ஜாா்ஜியாவின் நிகோலஸ் பாசிலாஷ்விலியை வென்றாா். காலிறுதியில் அவா், உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னரை சந்திக்கிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காலிறுதியில் ஸ்வெரெவ், ஆண்ட்ரீவா!
நடப்பு சாம்பியன் கௌஃப், ஸ்வியாடெக் தோல்வி!

சின்னா், ரைபகினா அதிா்ச்சித் தோல்வி: ஜோகோவிச், ஆண்ட்ரீவா முன்னேற்றம்

2-ஆவது சுற்றில் சிந்து, சாத்விக்/சிராக் இணை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



