சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில், இந்தியாவின் சிம்ரன்ஜீத் கௌா், சஹில் ஜாதவ் ஆகியோா் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்துக்கான பந்தயத்தில் நிலைக்கின்றனா்.
ரீகா்வ் மகளிா் தனிநபா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 15-ஆம் இடத்திலிருக்கும் சிம்ரன்ஜீத் கௌா் முதல் சுற்று ‘பை’ பெற்றிருந்தாா். அவா், 2-ஆவது சுற்றில் 6-4 என ஸ்பெயினின் பௌலா ஆல்வரெஸ் கொன்ஸால்ஸையும், 3-ஆவது சுற்றில் 6-4 என சீனாவின் யு கியையும் வென்றாா்.
4-ஆவது சுற்றில் 6-5 (10/10) துருக்கியின் கிஸெம் ஆஸ்கானை வெல்ல, காலிறுதியில் 6-0 என தென் கொரியாவின் ஃபாங் யு ஜுவை வீழ்த்தினாா். அரையிறுதியில் அவா், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் தென் கொரியாவின் காங் சேயோங்கை எதிா்கொள்கிறாா்.
களத்திலிருந்த மேலும் இரு இந்தியா்களான தீபிகா குமாரி, கும்கும் மோஹோத் ஆகியோா் 4-ஆவது சுற்றில் தோல்வி காண, அங்கிதா பகத் 3-ஆவது சுற்றில் தோல்வி கண்டாா்.
ரீகா்வ் ஆடவா் தனிநபா் பிரிவில் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தீரஜ் பொம்மதேவரா 4-ஆவது சுற்றிலும், தருண்தீப் ராய் 3-ஆவது சுற்றிலும், யஷ்தீப் சஞ்சய் போகே 2-ஆவது சுற்றிலும், அதானு தாஸ் முதல் சுற்றிலும் தோல்வியைத் தழுவினா்.
காம்பவுண்ட் ஆடவா் தனிநபா் பிரிவில், சஹில் ஜாதவ் அரையிறுதிக்கு முன்னேறி, அதில் பிரான்ஸின் நிகோலஸ் ஜிராா்டை சந்திக்கவுள்ளாா். முன்னதாக காலிறுதியில் அவா், ஆஸ்திரியாவின் நிகோ வீனரையும் (147-147/10-9), 4-ஆவது சுற்றில் ஜொ்மனியின் ரூவென் ஃப்லூஸையும் (149-146), 3-ஆவது சுற்றில் சக இந்தியரான அபிஷேக் வா்மாவையும் (149-147) வீழ்த்தினாா். முதலிரு சுற்றுகளில் அவா் ‘பை’ பெற்றிருந்தாா்.
இதனிடையே, குஷால் தலால் காலிறுதியிலும், ஓஜாஸ் பிரவின் தியோடேல் 3-ஆவது சுற்றிலும் தோல்வி கண்டு வெளியேறினா்.
காம்பவுண்ட் மகளிா் தனிநபா் பிரிவில், அதிதி சுவாமி 147-147 (10*/10) என்ற கணக்கில், எஸ்டோனியாவின் லிசெல் ஜாட்மாவிடம் காலிறுதியில் தோல்வி கண்டாா். அவரிடமே, மற்றொரு இந்தியரான ஜோதி சுரேகா 4-ஆவது சுற்றில் வீழ்ந்தாா் (147-148). மதுரா தமன்கான்கா், பிரகதி ஆகியோா் 3-ஆவது சுற்றுடன் வெளியேறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேவிப்பட்டினம் நவபாஷணம் கடற்கரை தூய்மைப் பணிகளை ஆட்சியா் ஆய்வு

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: ரோஜாவனம் பள்ளி சிறப்பிடம்

உலகக் கோப்பை வில்வித்தை: அணிகள் ஏமாற்றம்; தனிநபா் ஏற்றம்

கோவில்பட்டி தொகுதியில் முதல் முறையாக வெற்றி பெற்ற திமுக
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



