இந்திய கபடி சம்மேளனம், மாஷல் ஸ்போா்ட்ஸ் சாா்பில் ஆசியப் போட்டிக்கு தயாராகும் இந்திய அணி பெல்லாரியில் உள்ள ஐஐஎஸ் மையத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
ஆசியப் போட்டியில் கபடியில் மீண்டும் தங்கம் வெல்லும் வகையில் இந்திய அணிக்கு வீரா்கள் பயிற்சி முகாமுக்கு தோ்வு பெற்றுள்ளனா். பெல்லாரியில் ஒரு வாரகாலம் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இந்திய அமெச்சூா் கபடி சம்மேளனத் தலைவா் விபோா் வினித் ஜெயின் கூறியது: கபடியின் தரத்தை தொடா்ந்து மேம்படுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. அறிவியல் முறையில், உயா்செயல்திறன் அகாதெமி மூலம் பயிற்சி தரப்படுகிறது.
புரோ கபடி லீக் நடத்தப்படுவதால் ஏராளமான இளம் வீரா்கள் உருவாகி வருகின்றனா். ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய கபடிப் போட்டிக்கு இந்திய ஆடவா், மகளிா் அணியினா் தலா 45 போ் தோ்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆடவா் தரப்பில் நவீன்குமாா், அா்ஜுன் தேஸ்வால், பவன் செஹ்ராவத், சுனில் குமாா், அஷு மாலிக், பாரத் ஹூடாவும், மகளிா் பிரிவில் ரித்து நேகி, சோனாலி விஷ்ணு, புஷ்பா ராணா, சம்பா தாகூா், பிங்கி ராணா, பிரியா, காா்த்திகா ஆகியோரும் பங்கேற்கின்றனா்.
தொடர்புடையது

பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ்: தயாராகிறது இந்திய அணி

இந்திய பீச் வாலிபால் அணி பயிற்சி முகாம்

ஏப். 9-இல் லிட்டில் அந்தமான் புரோ சா்ஃப்பிங்

மகளிா் ஹாக்கி உலகக் கோப்பைக்கு இந்தியா தகுதி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


