ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இரண்டாம் பாதியில் கம்பேக்..! முதல்முறையாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது காங்கோ!

கால்பந்து உலகக் கோப்பையில் முதல்முறையாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய காங்கோ அணி குறித்து...

Congo's Samuel Moutoussamy (8) joins other teammates, coaches, and stff in celebrating a win after the World Cup Group K soccer match between DR Congo and Uzbekistan in Atlanta, Saturday, June 27, 2026. (AP Photo/Jacob Kupferman)

வெற்றிக் களிப்பில் காங்கோ அணியினர். - படம்: ஏபி

Published On :28 ஜூன் 2026, 11:59 am IST

கால்பந்து உலகக் கோப்பையில் உஸ்பெகிஸ்தானை 3 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய காங்கோ அணி அவுட் சுற்றுக்கு முதல்முறையாக முன்னேறி சாதனை படைத்துள்ளது.

கால்பந்து உலகக் கோப்பை 2026க்கு காங்கோ அணி அரை நூற்றாண்டுக்குப் பின்னர் (52 ஆண்டுகள்) தகுதி பெற்று சாதனை படைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அட்லாண்டா திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் உஸ்பெகிஸ்தானின் எல்டர் ஷோமுரோடோவ் 10ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார். முதல் பாதியில் உஸ்பெகிஸ்தான் 1-0 என முன்னிலை வகித்தது.

பின்னர், இரண்டாம் பாதியில் வெகுண்டெழுந்த காங்கோ அணியினர் 68 (பெனால்டி), 78, 90+1ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார்கள்.

முதல்முறையாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ள காங்கோ அணியின் வீரர்களும் ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்தப் போட்டியில் 2 கோல்கள் அடித்த காங்கோவின் யோவான் விஸ்ஸா ஆட்ட நாயகன் விருது வென்றார்.

Summary

Congo rallies to a 3-1 win against Uzbekistan to seal place in the World Cup knockouts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.