ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உலகக் கோப்பை: 5 போட்டிகளில் 4 ஆட்ட நாயகன் விருதுகள் வென்ற மெஸ்ஸி!

கால்பந்து உலகக் கோப்பையில் ஆட்ட நாயகன் விருதுகளை வென்று குவிக்கும் லியோனல் மெஸ்ஸி குறித்து...

Lionel Messi with the Man of the Match award.

ஆட்ட நாயகன் விருதுடன் லியோனல் மெஸ்ஸி. - படம்: எக்ஸ் / ஃபிஃபா உலகக் கோப்பை

Published On :8 ஜூலை 2026, 3:34 pm IST

கால்பந்து உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீன அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி ஆட்ட நாயகன் விருதுகளை வென்று குவித்து வருகிறார்.

நேற்றிரவு ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா கடைசி 15 நிமிஷங்களில் 3 கோல்கள் அடித்து 3-2 என த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி தொடக்கத்தில் பெனால்டியை கோலாக மாற்ற தவறிவிட்டார். பின்னர், இறுதியில் ஒரு கோல், ஒரு அசிஸ்ட் செய்து அசத்தினார். இந்தச் சிறப்பான செயல்பாட்டுக்காக மெஸ்ஸிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இதுவரை இந்த உலகக் கோப்பையில் 8 கோல்கள் அடித்துள்ள மெஸ்ஸி அதிக கோல்கள் அடித்தவராக முதலிடத்தில் இருக்கிறார்.

உலகக் கோப்பையின் வரலாற்றிலும் 21 கோல்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார். 9 அசிஸ்ட்டுகளைச் செய்து அதிலும் முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த உலகக் கோப்பையில் மெஸ்ஸி மொத்தமாக 5 ஆட்ட நாயகன் விருதுகள் வென்றிருந்தார். தற்போது, இந்த உலகக் கோப்பையில் காலிறுதிக்குள்ளாகவே 4 முறை ஆட்ட நாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார்.

Messi won the 'Man of the Match' award in 4 out of 5 games!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.