ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காலிறுதிக்கு முன்னேறியது நார்த்ஈஸ்ட் யுனைடெட்!

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில், நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி 3-1 கோல் கணக்கில் ஸ்ரீநகர் எஃப்சி1 அணியை வீழ்த்தியது.

NorthEast United advanced to the quarter-finals.

காலிறுதிக்கு முன்னேறியது நார்த்ஈஸ்ட் யுனைடெட் - X | Indian Football

Published On :12 ஆகஸ்ட் 2026, 5:38 am IST

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில், நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி 3-1 கோல் கணக்கில் ஸ்ரீநகர் எஃப்சி1 அணியை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் நார்த்ஈஸ்ட் அணிக்காக பார்த்திப் சுந்தர் கோகோய் 11 மற்றும் 54-ஆவது நிமிஷங்களிலும், அலாதீன் அஜாரே 68-ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தனர்.

ஸ்ரீநகர் அணிக்காக முகமது இலியாஸ் 71-ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் அடித்தார். இந்த வெற்றியை அடுத்து நார்த்ஈஸ்ட் அணி தொடர்ந்து 3 வெற்றிகளுடன் காலிறுதிக்கு முன்னேறியது. ஸ்ரீநகர் எஃப்சி 2-ஆவது தோல்வியுடன் போட்டியிலிருந்து வெளியேறியது.

நாங்சே வெற்றி: மேகாலய மாநிலம், ஷில்லாங்கில் நடைபெற்ற 31-ஆவது ஆட்டத்தில், நாங்சே எஸ்எஸ் & சிசி அணி 7-0 கோல் கணக்கில் மும்பை எஃப்சியை அபார வெற்றி கண்டது.

அந்த அணிக்காக ஹார்டி கிளிஃப் (11', 79'), கிட்போகிளாங் பாலே (41'), செஸ்டர்பால் லிங்டோ (56'), தவன்சா கார்லோஸ் (77', 82'), ஷீன் ஸ்டீவன்சன் (89') ஆகியோர் கோல் அடித்தனர்.

நாங்சே அணி முதல் வெற்றியுடன் காலிறுதி நம்பிக்கையில் இருக்க, மும்பை அணி 3-ஆவது தோல்வியுடன் வெளியேறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.