ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காமன்வெல்த் போட்டி: மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள்!

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் மும்முறை தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர்கள் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.

Praveen Chithravel and Selva Prabhu Thirumaran

பிரவீன் சித்ரவேல் மற்றும் செல்வ பிரபு திருமாறன்

Published On :1 ஆகஸ்ட் 2026, 7:31 pm IST

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் மும்முறை தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர்கள் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில், மும்முறை தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர்கள் பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கமும், செல்வ பிரபு திருமாறன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

ஆசிய போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேல், தற்போது கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அவர் மும்முறை தாண்டுதல் போட்டியில் 16.58 மீட்டர் தூரம் குதித்து வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார்.

வெண்கலப் பதக்கம் வென்ற செல்வ பிரபு 16.52 மீட்டர் தூரம் குதித்துள்ளார். சர்வதேசப் போட்டிகளில் செல்வ பிரபு வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும்.

இந்தப் போட்டியில் ஜமைக்காவைச் சேர்ந்த ஜோர்டான் ஸ்காட் 16.72 மீட்டர் தூரம் குதித்து தங்கப் பதக்கம் வென்றார்.

Summary

Commonwealth Games: Athletes from Tamil Nadu win medals in the triple jump!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.