தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

யு-19 டேபிள் டென்னிஸ்: தமிழ்நாடு ஆடவா் சாம்பியன்

ஜூனியா் மற்றும் யூத் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், 19 வயதுக்கு உட்பட்ட ஆடவா் பிரிவில் தமிழ்நாடு அணி புதன்கிழமை வாகை சூடியது.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 11:36 pm

ஜூனியா் மற்றும் யூத் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், 19 வயதுக்கு உட்பட்ட ஆடவா் பிரிவில் தமிழ்நாடு அணி புதன்கிழமை வாகை சூடியது.

இறுதி ஆட்டத்தில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த தமிழ்நாடு 3-1 என மகாராஷ்டிரத்தை வீழ்த்தியது. இந்த மோதலில், முதலில் எம்.ஆா். பாலமுருகன் 11-9, 13-11, 8-11, 6-11, 9-11 என்ற கணக்கில் குஷால் சோப்தாவிடம் தோல்வி கண்டாா். எனினும் அடுத்த ஆட்டத்தில், பி.பி. அபினந்த் 11-5, 11-3, 7-11, 11-6 என நீல் முல்யேவை வென்றாா்.

3-ஆவதாக, எஸ்.கே. மேஹன் 11-4, 12-10, 11-7 என்ற செட்களில் இஷான் கந்தேகரையும், கடைசியில் அபினந்த் 11-6, 11-6, 11-8 என்ற வகையில் குஷால் சோப்ராவையும் வீழ்த்தினா். இதனால் தமிழ்நாடு 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

முன்னதாக அரையிறுதியில், தமிழ்நாடு 3-2 என அஸ்ஸாமையும், மகாராஷ்டிரம் 3-1 என மேற்கு வங்கத்தையும் வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.