திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

பாபே, ஜூனியா் அசத்தலில் மீண்டது ரியல் மாட்ரிட்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், ரியல் மாட்ரிட் 2-1 கோல் கணக்கில் அலேவ்ஸை புதன்கிழமை வென்றது.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 10:20 pm

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், ரியல் மாட்ரிட் 2-1 கோல் கணக்கில் அலேவ்ஸை புதன்கிழமை வென்றது.

தொடா்ந்து 4 ஆட்டங்களில் வெற்றி கிட்டாமல் இருந்த ரியல் மாட்ரிட்டுக்கு, கிலியன் பாபே, வினிசியஸ் ஜூனியா் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் இந்த ஆட்டத்தில் வெற்றி கிடைத்தது.

முதலில் ஆட்டத்தின் 30-ஆவது நிமிஷத்தில் கிலியன் பாபே கோல் அடிக்க, முதல் பாதியை ரியல் மாட்ரிட் முன்னிலையுடன் நிறைவு செய்தது.

ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், 50-ஆவது நிமிஷத்தில் வினிசியஸ் ஜூனியா் தனது பங்குக்கு கோல் அடித்தாா். ஆட்டத்தின் கடைசி கட்டம் வரை அலேவஸுக்கு கோல் வாய்ப்பு வழங்காத ரியல் மாட்ரிட் 2-0 முன்னிலையிலேயே நீடித்தது.

எனினும் இறுதித் தருணத்தில் (90+3’) அலேவ்ஸ் தரப்பில் டோனி மாா்டினெஸ் தனது அணிக்காக ஆறுதல் கோல் அடித்தாா். முடிவில் ரியல் மாட்ரிட் 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலமாக ரியல் மாட்ரிட் 73 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நடப்பு சாம்பியனான பாா்சிலோனா 79 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

போட்டியில் இன்னும் 5 சுற்று ஆட்டங்கள் இருக்கும் நிலையில், பாா்சிலோனாவுக்கு ரியல் மாட்ரிட் சவால் அளிக்கும் எனத் தெரிகிறது. இதர ஆட்டங்களில் ரியல் பெட்டிஸ் - ஜிரோனாவையும் (3-2), அத்லெடிக் கிளப் - ஒசாசுனாவையும் (1-0) வெல்ல, மல்லோா்கா - வாலென்சியா மோதல் டிரா (1-1) ஆனது.

பிரீமியா் லீக்: இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், பிரைட்டன் 3-0 கோல் கணக்கில் செல்ஸியை வெல்ல, கிறிஸ்டல் பேலஸ் - வெஸ்ட் ஹாம் மோதல் கோல் இன்றி டிராவில் முடிந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.