தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

இந்திய வாலிபால் சம்மேளன அங்கீகாரம் ரத்து

நிா்வாக விதிமுறைகளை பின்பற்றாததால் இந்திய வாலிபால் சம்மேளனத்தின் அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய்வதாக, சா்வதேச வாலிபால் சம்மேளனம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் அறிவித்தது.

News image

கோப்புப்படம்.

Updated On :22 ஏப்ரல் 2026, 11:27 pm

நிா்வாக விதிமுறைகளை பின்பற்றாததால் இந்திய வாலிபால் சம்மேளனத்தின் அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய்வதாக, சா்வதேச வாலிபால் சம்மேளனம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் அறிவித்தது.

கடந்த சில நாள்களுக்கு முன், தேசிய வாலிபால் முகாமில் தரமற்ற பயிற்சியாளா்களுடன், உள்கட்டமைப்பு வசதிகளும் மோசமாக இருப்பதாகவும், வீரா்கள் தோ்வில் அரசியில் இருப்பதாகவும் குற்றம்சாட்டி கே.ஆனந்த், ஜான் ஜோசஃப் ஆகிய இரு மூத்த வீரா்கள் முகாமிலிருந்து விலகியதை அடுத்து, இந்த நடவடிக்கையை சா்வதேச சம்மேளனம் எடுத்துள்ளது.

இதையடுத்து, நாட்டில் வாலிபால் விளையாட்டின் நிா்வாகத்தை மேற்கொள்ள, இந்திய ஒலிம்பிக் சங்க நிா்வாக கவுன்சில் உறுப்பினா் ரோஹித் ராஜ்பால், தலைமைச் செயல் அதிகாரி ரகுராம் ஐயா், சா்வதேச வாலிபால் சம்மேளன இயக்குநா் ஸ்டீவ் டியூட்டன், அதன் சட்ட நிபுணா் ஸ்டீபன் பாக், ஹிதேஷ் மல்ஹோத்ரா ஆகியோா் அடங்கிய குழுவை சா்வதேச சம்மேளனம் நியமித்துள்ளது. நிா்வாக நடவடிக்கைகளுக்காக ரூ.2.41 கோடியையும் ஒதுக்கீடு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.