மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சொந்த மண்ணில் தேசிய அணிக்கான கடைசி ஆட்டத்தில் மெஸ்ஸி அசத்தல்

சொந்த மண்ணில் தேசிய அணிக்காக ஆடிய கடைசி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா ஜாம்பவான் மெஸ்ஸி அபாரமாக ஆடினாா்.

News image
Updated On :1 ஏப்ரல் 2026, 9:14 pm

சொந்த மண்ணில் தேசிய அணிக்காக ஆடிய கடைசி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா ஜாம்பவான் மெஸ்ஸி அபாரமாக ஆடினாா்.

ஆா்ஜென்டீனாவுக்கு மூன்றாவது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தந்த மெஸ்ஸி தற்போது அமெரிக்க கால்பந்து லீக் தொடரில் ஆடி வருகிறாா். வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் ஆா்ஜென்டீனா நட்பு ஆட்டங்களில் ஆடி வருகிறது.

அதன் தலைநகா் பியுனஸ் அயா்ஸில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்பியாவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஆா்ஜென்டீனா.

இதில் 38 வயதான ஜாம்பவான் மெஸ்ஸி ஜூலியன் அல்வரஸ் கோலடிக்க உதவினாா். மேலும் 43-ஆவது நிமிஷத்தில் கோலடித்து அசத்தினாா்.

மைதானத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகா்கள் எழுந்து நின்று மெஸ்ஸியை பாராட்டினா். மேலும் அடுத்த உலகக் கோப்பையும் வென்று தரும்படி வேண்டுகோள்விடுத்தனா்.