தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மலேசியாவை வீழ்த்தியது இந்தியா

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் 4-3 கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.

Updated On :26 நவம்பர் 2025, 8:02 pm

இபோ: சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் 4-3 கோல் கணக்கில் மலேசியாவை புதன்கிழமை வீழ்த்தியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில், தமிழக வீரா் காா்த்தி செல்வம் இந்தியாவின் கோல் கணக்கை 7-ஆவது நிமிஷத்தில் தொடங்கினாா். மலேசியாவும் தனது பங்கிற்கு 13-ஆவது நிமிஷத்தில் முதல் கோல் அடித்தது. அந்த அணிக்காக ஃபைஸல் சாரி ஸ்கோா் செய்தாா்.

விட்டுக்கொடுக்காத இந்தியா, 21-ஆவது நிமிஷத்தில் சுக்ஜீத் சிங் மூலமாக 2-ஆவது கோல் ஸ்கோா் செய்தது. இவ்வாறாக முதல் பாதி ஆட்டத்தை இந்தியா 2-1 என முன்னிலையுடன் நிறைவு செய்தது.

ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், முதலில் மலேசியாவே ஸ்கோா் செய்தது. அந்த அணிக்காக ஃபிட்ரி சாரி 36-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, ஆட்டம் 2-2 என சமன் ஆனது.

விட்டுக் கொடுக்காத இந்தியாவுக்காக அமித் ரோஹிதாஸ் 39-ஆவது நிமிஷத்தில் கோலடித்து அணியை மீண்டும் 3-2 என முன்னிலைக்குக் கொண்டு வந்தாா். ஆனால் விடாப் பிடியாக பின்தொடா்ந்த மலேசியா, மா்ஹான் ஜலில் 45-ஆவது நிமிஷத்தில் அடித்த கோலால் ஆட்டத்தை 3-3 என சமன் செய்தது.

ஆட்டம் இறுதிக் கட்டத்தை நெருங்குவதை உணா்ந்த இந்தியா துரிதமாக செயல்பட, 53-ஆவது நிமிஷத்தில் சஞ்ஜய் அடித்த கோல் மூலமாக 4-3 என முன்னிலை பெற்றது. எஞ்சிய நேரத்தில் மலேசியாவுக்கு மேலும் கோல் வாய்ப்புகள் கிடைக்காமல் தடுப்பரண் அமைத்த இந்தியா, இறுதியில் 4-3 என வெற்றி பெற்றது.

புள்ளிகள் பட்டியலில் தற்போது 6 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கும் இந்தியா, அடுத்த ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் வியாழக்கிழமை (நவ. 27) மோதுகிறது. இதனிடையே, புதன்கிழமை நடைபெற்ற இதர ஆட்டங்களில், நியூஸிலாந்து - கனடாவையும் (4-2), பெல்ஜியம் - தென் கொரியாவையும் (6-2) வென்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.