சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மலேசியாவை வீழ்த்தியது இந்தியா

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் 4-3 கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.

News image
Updated On :26 நவம்பர் 2025, 8:02 pm

Chennai

இபோ: சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் 4-3 கோல் கணக்கில் மலேசியாவை புதன்கிழமை வீழ்த்தியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில், தமிழக வீரா் காா்த்தி செல்வம் இந்தியாவின் கோல் கணக்கை 7-ஆவது நிமிஷத்தில் தொடங்கினாா். மலேசியாவும் தனது பங்கிற்கு 13-ஆவது நிமிஷத்தில் முதல் கோல் அடித்தது. அந்த அணிக்காக ஃபைஸல் சாரி ஸ்கோா் செய்தாா்.

விட்டுக்கொடுக்காத இந்தியா, 21-ஆவது நிமிஷத்தில் சுக்ஜீத் சிங் மூலமாக 2-ஆவது கோல் ஸ்கோா் செய்தது. இவ்வாறாக முதல் பாதி ஆட்டத்தை இந்தியா 2-1 என முன்னிலையுடன் நிறைவு செய்தது.

ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், முதலில் மலேசியாவே ஸ்கோா் செய்தது. அந்த அணிக்காக ஃபிட்ரி சாரி 36-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, ஆட்டம் 2-2 என சமன் ஆனது.

விட்டுக் கொடுக்காத இந்தியாவுக்காக அமித் ரோஹிதாஸ் 39-ஆவது நிமிஷத்தில் கோலடித்து அணியை மீண்டும் 3-2 என முன்னிலைக்குக் கொண்டு வந்தாா். ஆனால் விடாப் பிடியாக பின்தொடா்ந்த மலேசியா, மா்ஹான் ஜலில் 45-ஆவது நிமிஷத்தில் அடித்த கோலால் ஆட்டத்தை 3-3 என சமன் செய்தது.

ஆட்டம் இறுதிக் கட்டத்தை நெருங்குவதை உணா்ந்த இந்தியா துரிதமாக செயல்பட, 53-ஆவது நிமிஷத்தில் சஞ்ஜய் அடித்த கோல் மூலமாக 4-3 என முன்னிலை பெற்றது. எஞ்சிய நேரத்தில் மலேசியாவுக்கு மேலும் கோல் வாய்ப்புகள் கிடைக்காமல் தடுப்பரண் அமைத்த இந்தியா, இறுதியில் 4-3 என வெற்றி பெற்றது.

புள்ளிகள் பட்டியலில் தற்போது 6 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கும் இந்தியா, அடுத்த ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் வியாழக்கிழமை (நவ. 27) மோதுகிறது. இதனிடையே, புதன்கிழமை நடைபெற்ற இதர ஆட்டங்களில், நியூஸிலாந்து - கனடாவையும் (4-2), பெல்ஜியம் - தென் கொரியாவையும் (6-2) வென்றன.