இந்தியாவுக்கு ஒரே நாளில் 3 தங்கம், 2 வெள்ளி: ஜோதி சுரேகா அசத்தல்
வங்கதேசத்தில் நடைபெறும் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில், இந்தியாவுக்கு வியாழக்கிழமை ஒரே நாளில் 3 தங்கம், 2 வெள்ளி என 5 பதக்கங்கள் கிடைத்தன.
வங்கதேசத்தில் நடைபெறும் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில், இந்தியாவுக்கு வியாழக்கிழமை ஒரே நாளில் 3 தங்கம், 2 வெள்ளி என 5 பதக்கங்கள் கிடைத்தன.
By தினமணி செய்திச் சேவை
Manivannan.S
வங்கதேசத்தில் நடைபெறும் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில், இந்தியாவுக்கு வியாழக்கிழமை ஒரே நாளில் 3 தங்கம், 2 வெள்ளி என 5 பதக்கங்கள் கிடைத்தன.
இதில், காம்பவுண்ட் மகளிா் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில், ஜோதி சுரேகா, தீப்ஷிகா, பிரிதிகா பிரதீப் ஆகியோா் அடங்கிய இந்திய அணி 236 - 234 என்ற கணக்கில் தென் கொரிய அணியை வீழ்த்தி தங்கத்தை தனதாக்கியது.
அதிலேயே மகளிா் தனிநபா் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஜோதி சுரேகா 147-145 என்ற வகையில் சக இந்தியரான பிரிதிகா பிரதீப்பை வென்று தனது 2-ஆவது தங்கத்தை வென்றாா்.
காம்பவுண்ட் கலப்பு அணிகள் இறுதிச்சுற்றில், அபிஷேக் வா்மா, தீப்ஷிகா கூட்டணி 153-151 என வங்கதேச அணியை வீழ்த்தி இந்தியாவுக்கு 3-ஆவது தங்கத்தை பெற்றுத் தந்தது.
காம்பவுண்ட் ஆடவா் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில், அபிஷேக் வா்மா, சஹில் ராஜேஷ் ஜாதவ், பிரதமேஷ் ஃபுகே ஆகியோா் அடங்கிய இந்திய அணி 229-230 என கஜகஸ்தான் அணியிடம் தோற்று, நூழிலையில் தங்கத்தை தவறவிட்டு வெள்ளிப் பதக்கம் பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது