ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?
வெள்ளி ஓரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகி வருவது தொடர்பாக...
வெள்ளி ஓரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகி வருவது தொடர்பாக...
By இணையதளச் செய்திப் பிரிவு
Venkatesan
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.264 உயர்ந்து ரூ.96,240-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஓரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலை இந்த மாதம் தொடக்கம் முதலே ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.320 உயா்ந்து ரூ.96,320-க்கு விற்பனையானது. தொடா்ந்து வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கம் விலையில் மாற்றமின்றி, அதே விலைக்கு விற்பனையான நிலையில், செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.12,000-க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.96,000-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், புதன்கிழமை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.12,03-க்கும், பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.96,240-க்கும் விற்பனையாகிறது.
உச்சத்தில் வெள்ளி
வெள்ளி விலை செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.199-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 உயா்ந்து ரூ.1.99 லட்சத்துக்கும் விற்பனையான நிலையில், புதன்கிழமை ஒரே நாளில் அதிரடியாக கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.207 உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.8,000 உயா்ந்து ரூ.2.07 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
Silver rises by Rs. 8,000 per kg in a single day
எலும்பு முறிந்த கையோடு எனக்காக பேட் செய்த குர்சரண் சிங்: சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது