தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

20-0: விம்பிள்டனில் சாதனை படைத்த ஜோகோவிச்!

விம்பிள்டன் டென்னிஸில் நோவக் ஜோகோவிச் நிகழ்த்திய சாதனை குறித்து...

News image

நோவக் ஜோகோவிச். - படம்: ஏபி

Updated On :2 ஜூலை 2025, 1:31 pm

புல்தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் போட்டிகளில் முதல் சுற்றில் நோவக் ஜோகோவிச் சாதனை படைத்துள்ளார்.

லண்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அலெக்ஸாண்டர் முல்லருடன் மோதிய நோவக் ஜோகோவிச் முதல் செட்டில் அசத்திய ஜோகோவிச் 2-ஆவது செட்டில் டை பிரேக்கரில் இழந்தார்.

அடுத்தடுத்த செட்களில் மீண்ட ஜோகோவிச் எளிதாக வென்றார். இறுதியில் ஜோகோவிச் 6-1, 6-7 (7), 6-2, 6-2 என்ற செட்களில் வென்று அசத்தினார்.

3 மணி நேரம் 20 நிமிடம் சென்ற இந்தப் போட்டியில் ஜோகோவிச் முதல் செர்வில் 82 சதவிகிதமும் இரண்டாவது செர்வில் 63 சதவிகிதமும் வென்றார்.

ஜோகோவிச் முதல்முறையாக 2005-இல் விம்பிள்டனில் விளையாடினார். இதுவரை நடந்த விம்பிள்டன் போட்டிகளில் தான் விளையாடிய அனைத்து முதல் சுற்றுப் போட்டிகளிலும் (20-0) வென்று சாதனை படைத்துள்ளார்.

ஜோகோவிச் இரண்டாவது சுற்றில் டேனியல் எவன்ஸ் உடன் நாளை (ஜூலை 3) மோதுகிறார்.

Summary

Djokovic continued to display remarkable athleticism extend his perfect 20-0 record in opening matches at Wimbledon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.