தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

இனிவரும் போட்டியில் தாமதமாக பந்துவீசப்படும் சூழலில் ஹார்திக் பாண்டியா ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.

News image

ANI

Updated On :1 மே 2024, 5:55 am

மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை இழக்கும் சூழலில் உள்ள நிலையில், அந்த அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை கிட்டத்திட்ட இழந்துள்ளது.

புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ள மும்பை அணி, மீதமுள்ள 4 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் பிற அணிகளின் வெற்றி, தோல்விகளை பொறுத்தே ப்ளே ஆஃப் வாய்ப்பு கிடைக்கும்.

இதற்கிடையே, மும்பை அணி பந்துவீச்சுக்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொண்ட காரணத்தால் ஹார்திக் பாண்டியாவுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், நேற்றைய ஆட்டத்தில் விளையாடிய பிற மும்பை வீரர்களுக்கு தலா 6 லட்சம் அல்லது போட்டி சம்பளத்தில் இருந்து 25 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனில் ஏற்கெனவே ஹார்திக் பாண்டியாவுக்கு ஒரு முறை அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஒரு முறை தாமதமாக பந்துவீசப்படும் சூழலில் ரூ. 30 லட்சம் அபராதமும் ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.