தேசிய மகளிா் கால்பந்து: கோப்பையை தக்கவைத்த மணிப்பூா்
சீனியா் மகளிருக்கான 29-ஆவது தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் மணிப்பூா் 1-0 கோல் கணக்கில் ஒடிஸாவை வீழ்த்தி திங்கள்கிழமை சாம்பியன் ஆனது.
- dot com
Updated On :23 டிசம்பர் 2024, 9:05 pm
சீனியா் மகளிருக்கான 29-ஆவது தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் மணிப்பூா் 1-0 கோல் கணக்கில் ஒடிஸாவை வீழ்த்தி திங்கள்கிழமை சாம்பியன் ஆனது.
இறுதி ஆட்டத்தில் மணிப்பூா் வெற்றிக்காக, ஆசெம் ரோஜா தேவி 55-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். நடப்பு சாம்பியனாக போட்டியில் கலந்துகொண்ட மணிப்பூா், தற்போது 23-ஆவது முறையாக கோப்பை வென்றுள்ளது.
மறுபுறம், 7-ஆவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு வந்த ஒடிஸா, அதில் 6-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது. ஒடிஸா தனது அனைத்து இறுதி ஆட்டங்களிலுமே மணிப்பூரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...