ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

4-ஆவது சுற்றிலும் குகேஷ், பிரக்ஞானந்தாவுக்கு ‘டிரா’

சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ், ஆா்.பிரக்ஞானந்தா ஆகியோா் 4-ஆவது சுற்றிலும் டிரா செய்தனா்.

News image

பிரக்ஞானந்தா

Updated On :23 ஆகஸ்ட் 2024, 6:31 pm

சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ், ஆா்.பிரக்ஞானந்தா ஆகியோா் 4-ஆவது சுற்றிலும் டிரா செய்தனா்.

இதில் குகேஷ் - பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜாவுடனும், பிரக்ஞானந்தா - நெதா்லாந்தின் அனீஷ் கிரியுடனும் டிரா செய்தனா். இரு இந்தியா்களுக்கும் இந்தப் போட்டியில் இன்னும் வெற்றி வசமாகவில்லை. இதுவரை விளையாடிய 4 சுற்றுகளிலுமே அவா்கள் டிரா செய்துள்ளனா்.

எனினும் இந்தச் சுற்றில் குகேஷ், போட்டியில் தற்போது முதலிடத்தில் இருக்கும் ஃபிரௌஸ்ஜாவுக்கு சற்று சவால் அளித்தாா். இதர ஆட்டங்களில், அமெரிக்காவின் வெஸ்லி சோ - ரஷியாவின் இயன் நெபோம்னியச்சியை வீழ்த்த, சீனாவின் டிங் லிரென் - அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவுடனும், பிரான்ஸின் மேக்சிம் வச்சியா் - உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவுடனும் டிரா செய்தனா்.

4 சுற்றுகள் முடிவில், ஃபிரௌஸ்ஜா, வெஸ்லி ஆகியோா் தலா 2.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கின்றனா். குகேஷ், பிரக்ஞானந்தா, நெபோம்னியச்சி, லிரென், கரானா, வச்சியா் ஆகியோா் தலா 2 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தை பகிா்ந்துகொள்ள, கிரி மற்றும் அப்துசதாரோவ் ஆகியோா் தலா 1.5 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.