சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

இந்திய சுழற்பந்துவீச்சில் தடுமாறி விட்டோம்: ஸ்டீவ் ஸ்மித்

இந்திய சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக செயல்பட தவறிவிட்டதாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:17 pm

DIN

இந்திய சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக செயல்பட தவறிவிட்டதாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று (அக்டோபர் 8) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து நன்றாக விளையாடியது. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். 110 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்திரேலிய அணி 199 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலிய அணியை சாய்த்தனர். குறிப்பாக ரவீந்திர ஜடேஜா 38  ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

இந்த நிலையில், இந்திய சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக செயல்பட தவறிவிட்டதாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக பந்துவீசினார்கள். அவர்கள் அனைவரும் சிறந்த தரமான பந்துவீச்சாளர்கள் என்பதால், அவர்களது பந்துவீச்சை எதிர்கொள்வது சவாலனதாக இருந்தது. அவர்கள் ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டார்கள். இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நாங்கள் சிறப்பாக செயல்பட தவறிவிட்டோம். விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் அருமையாக பேட்டிங் செய்தனர் என்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.