டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

புதிய ஜெர்சியில் களமிறங்கும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்: காரணம் இதுதானா?

ஐபிஎல் தொடரின் தனது கடைசி லீக் ஆட்டத்தில் கால்பந்தாட்ட கிளப் அணியான மோஹன் பகான் அணியின் ஜெர்சியை பிரதிபலிக்கும் வகையில் சிவப்பு மற்றும் பச்சை நிறம் கலந்த புதிய ஜெர்சியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:58 pm

DIN

ஐபிஎல் தொடரின் தனது கடைசி லீக் ஆட்டத்தில் கால்பந்தாட்ட கிளப் அணியான மோஹன் பகான் அணியின் ஜெர்சியை பிரதிபலிக்கும் வகையில் சிவப்பு மற்றும் பச்சை நிறம் கலந்த புதிய ஜெர்சியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் விளையாடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வருகிற 20 ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடரஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்தப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் கால்பந்தாட்ட கிளப் அணியான மோஹன் பகான் அணியின் ஜெர்சியை பிரதிபலிக்கும் வகையில் சிவப்பு மற்றும் பச்சை நிறம் கலந்த பிரத்யேக ஜெர்சியில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது தொடர்பாக லக்னௌ அணி நிர்வாகம் புதிய ஜெர்சியில் வீரர்கள் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் அணியின் கேப்டன் க்ருணால் பாண்டியா, மார்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் ஆயுஷ் பதோனி ஆகியோர் புதிய ஜெர்சியில் உள்ளனர்.

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மோஹன் பகான் கால்பந்தாட்ட அணியின் உரிமையாளராக ஆர்பிஎஸ்ஜி குழுமத் தலைவர் சஞ்சீவ் கோயங்கா உள்ளார். அதன் காரணத்தினால், இந்த சிறப்பு ஜெர்சியை அணிந்து லக்னௌ அணி விளையாடவுள்ளது. அதே நேரத்தில்  கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மோஹன் பகான் அணி ஐஎஸ்எல் கால்பந்து லீகில் விளையாடி வருகிறது. இதில், அந்த அணி நடப்பு சாம்பியனாக திகழ்கிறது.

தற்போது ஏடிகே மோஹன் பகான் என அறியப்படும் கால்பந்தாட்ட அணி வரும் ஜூன் 1-ம் தேதி முதல் மோஹன் பகான் சூப்பர் ஜெயண்ட் என மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 7 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அந்த அணி 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.