தொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

இந்திய கூடைப்பந்து சம்மேளன புதிய தலைவர் ஆதவ் அர்ஜுனா

இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக, தமிழகத்தின் ஆதவ் அர்ஜுனா புதன்கிழமை தேர்வு செய்யப்பட்டார். 

News image
Updated On :5 ஜூலை 2023, 9:15 pm

இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக, தமிழகத்தின் ஆதவ் அர்ஜுனா புதன்கிழமை தேர்வு செய்யப்பட்டார். 
தில்லியில் நடைபெற்ற சம்மேளன தேர்தலில் மொத்தம் பதிவாகிய 41 வாக்குகளில், தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவர் ஆதவ் அர்ஜுனா 38 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். 
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த ஆதவ் அர்ஜுனா, "இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவரான முதல் தமிழர் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக சம்மேளன தேர்தலை நடத்தாமல் ஒரு சிலர் மட்டுமே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தற்போது நீதிமன்றம் மூலம் தேர்தலை நடத்தி வெற்றி பெற்றுள்ளோம். 
இந்திய கூடைப்பந்து அணியை உலக அளவில் முதல் 10 இடங்களுக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். "கூடைப்பாந்தாட்ட லீக்' போட்டிகள் நடத்தப்பட்டு இந்திய அளவில் வீரர்களின் தரம் உயர்த்தப்படும். அதில் வெளிநாட்டு வீரர்களை விளையாட வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.