தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

தன்னுடைய வெற்றிக்கான காரணம் குறித்து மனம் திறந்த அர்ஷ்தீப் சிங்

அழுத்தமான சூழலில் அமைதியாக இருப்பது மற்றும் நான் ஓடி வந்து பந்து வீசுவதில் செய்த மாற்றமே இந்த ஐபிஎல் சீசனில் என்னுடைய வெற்றிக்கு காரணம் என பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார்

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:51 pm

DIN

அழுத்தமான சூழலில் அமைதியாக இருப்பது மற்றும் நான் ஓடி வந்து பந்து வீசுவதில் செய்த மாற்றமே இந்த ஐபிஎல் சீசனில் என்னுடைய வெற்றிக்கு காரணம் என பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

பந்து வீசுவதற்கு ஓடி வரும் விதத்தை மாற்றியது நோ-பால் வீசாமல் இருக்க எனக்கு உதவியது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் வெற்றிக்குப் பிறகு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: எப்போது விக்கெட் எடுத்தாலும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்த வெற்றி எனக்கு மேலும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நான் ஓடி வந்து பந்து வீசும் விதத்தில் சிறிது மாற்றம் செய்தேன். அவ்வாறு செய்தது நான் நோ-பால் வீசாமல் இருக்க எனக்கு உதவியது. நான் இப்போது விளையாடும் கிரிக்கெட் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அழுத்தமான சூழலில் அமைதியாக இருப்பதும் எனது வெற்றிக்கு முக்கிய காரணம் என்றார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 4 ஓவர்களை வீசிய அர்ஷ்தீப் சிங் 29 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.