2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

 ஆர்ஜெண்டினா, போலந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி! 

உலகக் கோப்பை போட்டியில் குரூப் சி பிரிவில் ஆர்ஜெண்டினாவிடன் தோற்ற போலந்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 

News image
உலகக் கோப்பையின் போது போலந்தின் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி (வலது) ஆர்ஜெண்டினாவின் கிறிஸ்டியன் ரொமேரோ பந்துக்காக சண்டையிட்டனர்.
Updated On :1 பிப்ரவரி 2024, 10:59 am

DIN

கத்தாரில் நடைபெற்றுவரும் கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் குரூப் சி பிரிவில் ஆர்ஜெண்டினா, போலந்து அணிகள் மோதின. 

வெற்றி பெற்ற அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் என்பதால் முக்கியமான போட்டியாக இருந்தது. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் ஆர்ஜெண்டினாவை சேர்ந்த அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் 46ஆவது நிமிஷத்தில் முதல் கோல் அடித்து அசத்தினார். பின்னர் ஆர்ஜெண்டினாவை சேர்ந்த ஜூலியன் அல்வாரெஸ் 67வது நிமிஷத்தில் இரண்டாவது கோலை அடித்தார். 

இறுதி வரை போராடிய போலந்து அணியால் ஒரு கோல்கூட அடிக்க முடியவில்லை. இதனால் 2-0 என ஆர்ஜெண்டினா வெற்றி பெற்றது. 

குரூப் சி பிரிவில் இன்னொரு ஆட்டத்தில் சவுதி அரேபியா, மெக்சிகோ அணிகள் மோதின. இந்த அணிகளும் முதல் பாதியில் கோல் அடிக்கவில்லை. 

இரண்டாம் பாதியில் மெக்சிகோ தனது முதல் கோலை 47வது நிமிஷத்தில் அடித்தது. 52வது நிமிஷத்தில் 2வது கோலையும் அடித்து அசத்தியது. சவுதி அரேபியா எக்ஸ்ட்ராவாக கொடுக்கப்பட்ட (90+5) 5வது நிமிடத்தில் தனது முதல் கோலை அடித்தது. இறுதியில் மெக்சிகோ அணி 2-1 என்ற கோல் கணக்கில்  வென்றது. 

போலந்து அணியின் புள்ளியும் மெக்சிகோ அணியின் புள்ளியும் சமமாக இருந்தாலும் இந்த போட்டியில் மெக்சிகோ 7 மஞ்சள் அட்டைகளையும், போலந்து 4 மஞ்சள் அட்டைகளையும் பெற்றதன் காரணமாக போலந்து அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பெற்றது. 

இதன் மூலம் குரூப் சி பிரிவில் ஆர்ஜெண்டினா, போலந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 1986க்கு பிறகு இப்போதுதான் லீக் சுற்றில் இருந்து போலந்து அடுத்த சுற்றுக்கு தகுதிபெறுவது குறிப்பிடத்தக்கது. 

நாக் அவுட் சுற்றில் போலந்து, பிரான்ஸ் அணியுடனும் ஆர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா அணியுடனும் மோத உள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.