ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

ரூ. 16 லட்சம் சம்பளத்தில் இந்தியக் கால்பந்து அணிக்கு ஜோதிடர் நியமனம்!

இப்பணியில் ஈடுபடுவது ஒரு ஜோதிட நிறுவனம் என்பது தெரிய வந்தது என்று கூறியுள்ளார்.

News image
Updated On :22 ஜூன் 2022, 11:48 am

ஏஎஃப்சி ஆசியக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடியதற்கு வீரர்களின் திறமை தான் காரணம் என நாம் நினைத்துக் கொண்டுள்ளோம். ஆனால் பின்னணியில் வேறொரு விஷயம் நடைபெற்றுள்ளது. 

ஏஎஃப்சி ஆசியக் கோப்பை பிரதான போட்டிக்கு இந்திய அணி சமீபத்தில் தகுதியடைந்தது. கம்போடியா, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகளை சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி வீழ்த்தியது. இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தி நன்றாக விளையாடுவதற்காக ரூ. 16 லட்சம் செலவழித்து ஜோதிட நிறுவனத்தை அகில இந்தியக் கால்பந்து சம்மேளனம் நியமித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியைச் சேர்ந்த ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ஆசியக் கோப்பைப் போட்டிக்கு முன்பு அணி வீரர்களுக்கு ஊக்கமூட்டுபவராக ஒருவர் நியமிக்கப்பட்டார். பிறகுதான் இப்பணியில் ஈடுபடுவது ஒரு ஜோதிட நிறுவனம் என்பது தெரிய வந்தது என்று கூறியுள்ளார். இந்திய வீரர்களிடம் மூன்று முறை அந்நிறுவனத்தைச் சேர்ந்தவர் உரையாடியதாகவும் தெரிகிறது. தேசிய விளையாட்டு விதிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தால் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழு இந்தியக் கால்பந்து சம்மேளனத்தைக் கடந்த மாதம் முதல் நிர்வகித்து வருகிறது. 

இந்திய முன்னாள் கோல்கீப்பர் தனுமாய் போஸ், அகில இந்தியக் கால்பந்து சம்மேளனத்தின் இந்நடவடிக்கையை விமர்சனம் செய்துள்ளார். இளைஞர்களுக்கான பல போட்டிகளை கால்பந்து சம்மேளனம் நடத்தவில்லை. பல முக்கியப் போட்டிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் இதுபோன்ற செயல்கள் இந்தியக் கால்பந்தின் நற்பெயரைக் கெடுப்பதாக உள்ளது. இதன் பின்னணியில் உள்ளவர்களை நிர்வாகக் குழு கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.