தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ரஞ்சி: ஓர் ஆட்டத்திலும் தோற்காத பெங்கால் அணி அரையிறுதிக்குத் தகுதி

அபிமன்யு ஈஸ்வரன் தலைமையில் இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் விளையாடி வரும் பெங்கால் அணி இதுவரை ஓர் ஆட்டத்திலும் தோற்கவில்லை. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:29 am

DIN

அபிமன்யு ஈஸ்வரன் தலைமையில் இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் விளையாடி வரும் பெங்கால் அணி இதுவரை ஓர் ஆட்டத்திலும் தோற்கவில்லை. 

காலிறுதிச் சுற்றில் நான்காம் நாளன்று மூன்று ஆட்டங்களின் முடிவு தெரிந்த நிலையில் பெங்கால் - ஜார்கண்ட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 5-ம் நாளுக்குச் சென்றது. 

உத்தரகண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பைக் காலிறுதி ஆட்டத்தில் மும்பை அணி, 725 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. கர்நாடகத்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தை உத்தரப் பிரதேச அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பஞ்சாப் அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தை மத்தியப் பிரதேச அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

பெங்கால் - ஜார்கண்ட் அணிகளுக்கு இடையிலான காலிறுதி ஆட்டத்தில் 4-ம் நாள் இறுதியில் பெங்கால் அணி 31 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்தது. 2-வது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 551 ரன்கள் முன்னிலை பெற்றது. கடைசி நாளில் பெங்கால் அணி 2-வது இன்னிங்ஸில் 85.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்து இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. மனோஜ் திவாரி 136 ரன்கள் எடுத்தார். இதையடுத்து ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதால் பெங்கால் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

அரையிறுதி ஆட்டங்கள் பெங்களூரில் ஜூன் 14 அன்று நடைபெறுகின்றன. 

அரையிறுதிச் சுற்றில் மோதும் அணிகள்

மும்பை vs உத்தரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம் vs பெங்கால்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.