மாா்ச் 27 அல்லது ஏப். 2-இல் ஐபிஎல் போட்டி தொடக்கம்: பிசிசிஐ செயலாளா் ஜெய் ஷா தகவல்
மாா்ச் 27 அல்லது ஏப். 2-ஆம் தேதிகளில் ஐபிஎல் (2022) 15-ஆவது சீசன் போட்டிகள் தொடங்கும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) செயலாளா் ஜெய் ஷா தெரிவித்துள்ளாா்.










