நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

ரஞ்சியில் ரஹானே இரட்டைச் சதம்: இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு?

ரஞ்சி கோப்பைப் போட்டியில் பிரபல வீரர் ரஹானே இரட்டைச் சதமடித்து அசத்தியுள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 11:09 am

DIN

ரஞ்சி கோப்பைப் போட்டியில் பிரபல வீரர் ரஹானே இரட்டைச் சதமடித்து அசத்தியுள்ளார்.

மும்பை - ஹைதரபாத் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் மும்பையில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் மும்பை அணி, 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 457 ரன்கள் குவித்தது. ரஹானே 139, சர்ஃபராஸ் கான் 40 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இந்நிலையில் இன்றும் சிறப்பாக விளையாடி இரட்டைச் சதமடித்துள்ளார் ரஹானே. 261 பந்துகளில் 3 சிக்ஸர், 26 பவுண்டரிகளுடன் 204 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தி்ல் ஜெயிஸ்வால் 162, சூர்யகுமார் யாதவ் 90, சர்ஃபராஸ் கான் 126 ரன்கள் எடுத்தார்கள்.

மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸில் 127.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 651 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. 

இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள ரஹானே, ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் இரட்டைச் சதமடித்துள்ளதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்ட புஜாரா தற்போது நன்கு விளையாடி வருகிறார். அதேபோல தனது திறமையை நிரூபிக்க ரஹானேவுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.