2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தோல்விக்குப் பிறகு எம்பாப்பேவின் முதல் ட்வீட்! 

பிரான்ஸ் அணியின் கால்பந்து வீரர் எம்பாப்பேவின் ட்வீட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

News image
தங்கக் காலணி விருதை வென்ற எம்பாப்பே.
Updated On :1 பிப்ரவரி 2024, 11:08 am

DIN

உலகக் கோப்பையை ஆர்ஜென்டீனா வென்றதால் மெஸ்ஸி உலகின் சிறந்த கால்பந்து வீரராகப் போற்றப்படுகிறார். எனினும் தோல்வியடைந்தாலும் பிரான்ஸின் 23 வயது வீரர் எம்பாப்பே உலகக் கால்பந்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். எம்பாப்பேவின் மகத்தான ஆட்டம் தான் இறுதிச்சுற்றை மிகவும் சுவாரசியமாக்கியது என்பது மிகையாகாது. 

பொறி பறந்த 2-வது பாதியில் 80 மற்றும் 81-வது நிமிடங்களில் இரு கோல்களை அடித்து அசத்தினார் எம்பாப்பே. 90 நிமிடங்களுக்குப் பிறகு இரு அணிகளும் 2-2 என சமநிலையில் இருந்தன. கூடுதல் நேரத்தில் 108-வது நிமிடத்தில் மெஸ்ஸி ஒரு கோல் அடிக்க, 118-வது நிமிடத்தில் எம்பாப்பே இன்னொரு கோல் அடித்து 3-3 என சமநிலைக்குக் கொண்டு வந்தார். அதன்பிறகு இரு அணிகளாலும் மேலும் கோல் எதுவும் அடிக்க முடியாததால் ஆட்டம் பெனால்டி பகுதிக்குச் சென்றது. இதில் 4-2 என ஆர்ஜென்டீனா வென்று கால்பந்து உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. 

7 கோல்களை அடித்த மெஸ்ஸியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு 8 கோல்களுடன் தங்கக் காலணி விருதை வென்றார் எம்பாப்பே. கோப்பையை இழந்தாலும் ரசிகர்களின் இதயத்தை வென்றார் எம்பாப்வே. தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், “நாங்கள் திரும்ப வருவோம்” என பதிவிட்டுள்ளார். 

இந்த ட்வீட் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. மேலும் இந்த ட்வீட்டுக்கு 1.3 மில்லியன் (13 லட்சம்) லைக்குகளை பெற்றுள்ளது. 171 ஆயிரத்தும் மேலான ரீடிவிட்டுகள் செய்யப்பட்டுவருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.