வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

இங்கிலாந்து தொடர்: இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு

அவருடன் தொடர்பில் இருந்த விக்கெட் கீப்பர் சஹாவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:38 am

ANI

இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியைச் சேர்ந்த மேலும் ஒருவர், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 முதல் தொடங்குகிறது. இதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்கள் டர்ஹமில் பயிற்சியைத் தொடங்குகிறார்கள். ஜூலை 20 முதல் தொடங்கும் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். 

இங்கிலாந்தில் உள்ள இந்திய வீரர்களில் இருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் ஒரு வீரருக்குச் சமீபத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா இல்லை என உறுதியாகியுள்ளது. விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற இங்கிலாந்து - ஜெர்மனி அணிகளுக்கு இடையிலான யூரோ கோப்பை ஆட்டத்தை நேரில் கண்டுகளித்தார் ரிஷப் பந்த். இதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ரிஷப் பந்த், கடந்த ஒரு வாரமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லாததால் விரைவில் மீண்டு வந்து இந்திய அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவார் என அறியப்படுகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்ட வீரரின் பெயர் பற்றி பிசிசிஐ இதுவரை தகவல் தெரிவிக்கவில்லை. இந்திய வீரர் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை பிசிசிஐயின் துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா ஒரு பேட்டியில் உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் உள்ள த்ரோடவுன் நிபுணர் தயானந்த கரானி, கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனம் இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளது. இதையடுத்து தயானந்த கரானியுடன் தொடர்பில் இருந்த விக்கெட் கீப்பர் சஹாவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.