பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கரோனா அச்சம்: தனிமைப்படுத்தப்பட்ட இங்கிலாந்து பயிற்சியாளர்

கரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததால் இங்கிலாந்து பயிற்சியாளர் சில்வர்வுட் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

News image

இங்கிலாந்து வீரர்களுடன் சில்வர்வுட் (வலது)

Updated On :30 டிசம்பர் 2021, 9:59 am

கரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததால் இங்கிலாந்து பயிற்சியாளர் சில்வர்வுட் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டை வென்று ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய அணி. 

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஏழு பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியின் மூன்று பயிற்சியாளர்கள், நான்கு குடும்ப உறுப்பினர்கள் என மொத்தமாக ஏழு பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். போட்டி நடுவரும் முன்னாள் ஆஸி. வீரருமான டேவிட் பூன், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஜனவரி 5 அன்று தொடங்கும் 4-வது டெஸ்டில் டேவிட் பூன் பணியாற்ற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ஸ்டீவ் பெர்னார்ட், போட்டி நடுவராக சிட்னி டெஸ்டில் பணியாற்றவுள்ளார். 

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துப் பயிற்சியாளர் ஜான் லூயிஸ், சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஜீதன் படேல், உடற்பயிற்சி நிபுணர் டேரன் வெண்டஸ் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவருடன் தொடர்பில் இருந்த காரணத்துக்காக இங்கிலாந்து பயிற்சியாளர் சில்வர்வுட் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் 4-வது டெஸ்டில் அவர் பங்கேற்க மாட்டார். அவருக்குப் பதிலாக கிரஹாம் தோர்ப், சில்வர்வுட்டின் பணிகளை மேற்கொள்வார். இரு அணி வீரர்களுக்கும் இன்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன்பிறகு அனைவரும் தனி விமானத்தில் சிட்னிக்கு நாளை செல்லவுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.