/

கரோனாவை விரட்ட போராடுபவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக மொட்டை அடித்துக் கொண்டார் வார்னர்!

இதே பாணியில் ஆதரவைத் தெரிவிக்க விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித்தையும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:19 pm

எழில்

மருத்துவர்கள் உள்ளிட்ட கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக மொட்டை அடித்துக்கொண்டுள்ளார் பிரபல ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கரோனா வைரஸால் உலகம் முழுக்க 37,000 மக்கள் இறந்துள்ளார்கள். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 1200 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆஸ்திரேலியாவில் 19 பேர் மரணமடைந்துள்ளார்கள்.

இந்நிலையில், கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக மொட்டை அடித்துக்கொண்டுள்ளார் பிரபல ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது:

கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக மொட்டை அடித்துக்கொண்டுள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் இதே பாணியில் ஆதரவைத் தெரிவிக்க விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித்தையும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.