அதிரடியாக விளையாடிய டெஸ்ட் தொடக்க வீரர் என்றால் எல்லோருக்கும் சேவாக் தான் ஞாபகத்துக்கு வருவார். ஆஸி. அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் கூட இதைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் சேவாக் அல்ல, சாஹித் அப்ரிடி தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடும் நிலையை உருவாக்கினார் என விநோதமான கருத்தொன்றைக் கூறியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம்.
ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக் பின்னால் தான் வந்தார். 1999-2000 காலக்கட்டத்தில் டெஸ்ட் தொடக்க வீரர்களின் மனநிலையை மாற்றியவர் சாஹித் அப்ரிடி. ஒரு பந்துவீச்சாளராக என்னால் அப்ரிடியை வீழ்த்த முடியும். அதேசமயம் அவர் என் பந்துகளில் பல பவுண்டரிகளில் அடிப்பார் என்பதையும் அறிந்து வைத்திருப்பேன். மோசமான பந்துகளை அப்ரிடி சிக்ஸருக்கு விரட்டுவார்.
1999-2000-ல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அப்ரிடியை முதலில் அணியில் சேர்ப்பதாகவே இல்லை. தேர்வுக்கு முன்பு இம்ரான் கானிடம் நான் பேசினேன். இந்தியச் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரில் அப்ரிடியும் இடம்பெறவேண்டும். ஆனால் தேர்வுக்குழு உறுப்பினர்கள் சிலர் மறுக்கிறார்கள் என்று புகார் கூறினேன். அவர் எனக்குச் சம்மதம் சொன்னார். அப்ரிடியைத் தேர்வு செய். அவரைத் தொடக்க வீரராக விளையாட அனுமதிக்கவேண்டும். நிச்சயம் 1-2 டெஸ்டுகளில் வெற்றியைத் தேடித் தருவார் என்றார் இம்ரான். அவரிடம் நான் எப்போதும் ஆலோசனைகள் கேட்பேன். சென்னையில் அற்புதமாக விளையாடினார் அப்ரிடி. கும்ப்ளே, சுனில் ஜோஷி பந்துகளில் சிக்ஸர்கள் அடித்தார் என்கிறார் வாசிம் அக்ரம்.
1998-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடக்க வீரராகக் களமிறங்கினார் அப்ரிடி. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சென்னை டெஸ்டில் 141 ரன்கள் எடுத்து தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். இதனால் அந்த டெஸ்டில் பாகிஸ்தான் வென்றதோடு டெஸ்ட் தொடரையும் 2-1 என வென்றது. எனினும் டெஸ்ட் வீரராக நீண்ட நாள் அப்ரியால் நிலைக்க முடியவில்லை. 27 டெஸ்டுகள் விளையாடி 5 சதங்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் சேவாக், 104 டெஸ்டுகள் விளையாடி, 2 முச்சதங்கள் உள்பட 23 சதங்கள் எடுத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


