/

வெளவால்களைச் சாப்பிட்டு வைரஸை உலகம் முழுக்க ஏன் பரப்புகிறீர்கள்?: சீனர்கள் மீது சோயிப் அக்தர் சாடல்!

நீங்கள் எதற்காக வெளவால்களைச் சாப்பிட்டு அதன் ரத்தம், சிறுநீரைக் குடித்து, வைரஸை உலகம் முழுக்கப் பரப்புகிறீர்கள்...

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:11 pm

எழில்

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவை பொருத்தவரை இதுவரை 84 பேருக்கு இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் வெளியிட்டுள்ள விடியோவில் கூறியுள்ளதாவது:

நீங்கள் எதற்காக வெளவால்களைச் சாப்பிட்டு அதன் ரத்தம், சிறுநீரைக் குடித்து, வைரஸை உலகம் முழுக்கப் பரப்புகிறீர்கள் என எனக்குப் புரியவில்லை. நான் சீன மக்களைப் பற்றி தான் பேசுகிறேன். இதனால் உலகமே சிக்கலில் உள்ளது. நாய், பூனை, வெளவால் போன்றவற்றை எப்படிச் சாப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லை. நினைத்தாலே கோபமாக வருகிறது. 

ஒட்டு மொத்த உலகமும் இப்போது ஆபத்தில் உள்ளது. சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. ஒட்டு மொத்த உலகமும் ஸ்தம்பித்துள்ளது. 

நான் சீன மக்களுக்கு எதிராகப் பேசவில்லை. விலங்குகளுக்கான சட்டத்துக்கு எதிரானவனும் கிடையாது. இதுபோன்ற உணவுகளைச் சாப்பிடுவது உங்கள் கலாசாரம், பாரம்பரியம் என்பதையும் புரிந்துகொள்கிறேன். ஆனால் இது உங்களுக்குப் பயன் அளிக்காது. இது மனிதநேயத்தைக் கொலை செய்கிறது. சீனர்களைப் புறக்கணியுங்கள் என்று சொல்லவில்லை. ஆனால் சிலவற்றுக்குச் சட்டங்கள் இருக்கவேண்டும். எல்லாவற்றையும் நீங்கள் சாப்பிடக்கூடாது என்று கூறியுள்ளார். 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.