தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கரோனா பாதிப்பால் ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பா?: பிசிசிஐ தரப்பு பதில்

கரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்படுமா என்கிற கேள்விக்கு பிசிசிஐ தரப்பில் பதில் தெரிவித்துள்ளதாவது...

News image
Updated On :9 மார்ச் 2020, 7:11 am

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்படுமா என்பதற்கு பிசிசிஐ தரப்பு பதில் அளித்துள்ளது. 

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸால், உலகம் முழுவதும் இதுவரை 3,637 போ் உயிரிழந்துவிட்டனா். சுமாா் 1,07,350 போ் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தியாவைப் பொறுத்தவரை, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை நாற்பதைத் தாண்டியுள்ளது. கரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொள்வதற்காக, 52 ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 6-ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் மொத்தம் 4,058 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக, புணேயில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இத்தாலியில் விளையாட்டு மைதானங்களுக்கு ரசிகா்கள் ஏப்ரல் மாதம் வரை வருவதை தவிா்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டி இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் 20 ஓவா் உள்ளூா் கிரிக்கெட் போட்டியாகும். சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் உள்பட 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன. வெளிநாடுகளைச் சோ்ந்த கிரிக்கெட் வீரா்களும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்று விளையாடவுள்ளனா். வரும் 29-ம் தேதி முதல் ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ளது. மும்பையில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை ஆகிய அணிகள் மோதவுள்ளன. 

இந்நிலையில் கரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்படுமா என்கிற கேள்விக்கு பிசிசிஐ தரப்பில் பதில் தெரிவித்துள்ளதாவது:

நிலைமையைக் கண்காணித்து வருகிறோம்.  எல்லா முன்னேற்பாடுகளிலும் கவனம் செலுத்துவோம். எந்தக் குறையும் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். ஐபிஎல் தொடங்க இன்னமும் பல நாள்கள் உள்ளன. எனவே யாரும் பதற்றப்பட வேண்டாம். ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்படுவது குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. ஒவ்வொரு மைதானத்திலும் மருத்துவக்குழு செயல்படும். எல்லாப் பார்வையாளர்களும் பரிசோதிக்கப்படுவார்கள் என்றார். 

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் செய்தியாளா்களைக் கடந்த வெள்ளிக்கிழமை பிசிசிஐ தலைவா் செளரவ் கங்குலி சந்தித்து கூறியதாவது: ஐபிஎல் இம்மாதம் 29-ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி தொடங்கும். அனைத்து நாடுகளில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்கு வரவுள்ளது. இதனால் ஒரு பிரச்னையும் எழவில்லை. உலகம் முழுவதும் ஒரு நாட்டு அணி இன்னொரு நாட்டுக்குச் சென்று விளையாடி வருகிறது. அவரிடம், ஐபிஎல் போட்டியில் கரோனா வைரஸால் விளையாட்டு வீரா்களும், ரசிகா்களும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும். எந்த மாதிரியான நடவடிக்கைகள் என்று கேட்டால் அதை சரியாக இப்போது கூற முடியவில்லை. மருத்துவக் குழுதான் அதை எங்களிடம் தெரிவிக்கும். அதன்படி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றாா் கங்குலி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.