தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

அதிர்ஷ்டவசமாக ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்குத் தகுதி பெற்ற இந்திய வீரர்!

தரவரிசையில் 122-ம் இடத்தில் உள்ள பிரஜ்னேஷ் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் முதல் சுற்றில்

News image
Updated On :18 ஜனவரி 2020, 10:01 am

இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கான தகுதிச்சுற்றில் 6-7, 2-6 என லட்வியாவின் எர்னெஸ்ட்ஸ் குல்பிஸுடன் தோல்வியடைந்தார். இதனால் அவரால் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் முதல் சுற்றில் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டது.

ஆனால் அவருக்கு அதிர்ஷ்டம் வேறு வகையில் அமைந்தது. சில வீரர்கள் காயங்கள் காரணமாகவும் ஊக்க மருந்து விவகாரம் சார்பாக இன்னொரு வீரரும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் கலந்துகொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனால் இந்தியாவின் பிரஜ்னேஷ், ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் முதல் சுற்றில் விளையாடத் தகுதி பெற்றுள்ளார்.  

தரவரிசையில் 122-ம் இடத்தில் உள்ள பிரஜ்னேஷ் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் முதல் சுற்றில் ஜப்பானின் தத்சுமா இடோவை எதிர்கொள்கிறார். இதில் மட்டும் அவர் வெற்றி பெற்றுவிட்டால், 2-வது சுற்றில் முன்னணி வீரர் ஜோகோவிச்சை எதிர்கொள்ள நேரிடும். கடந்த வருடம் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் முதல் சுற்றுக்குத் தகுதி பெற்ற பிரஜ்னேஷ் இந்த வருடம் தொடங்கும் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியிலும் தகுதி பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.