தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியை ஆரம்பித்துவிட்டார் தோனி: பயிற்சியாளர் தகவல்

எப்போது மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவார் என்பது குறித்து நான் அவரிடம் பேசவில்லை. ஆனால்

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:31 pm

எழில்

மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு முடிவை அறிவிப்பாரா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. வரும் ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறியிருந்தாா். இந்நிலையில் 2019-20 ஆண்டுக்கான 27 வீரா்கள் பெயா்கள் கொண்ட ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் தோனியின் பெயா் நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது ஜார்கண்ட் கிரிக்கெட் அணியினருடன் பயிற்சியில் இணைந்துள்ளார் தோனி. அவர் பயிற்சியில் ஈடுபடும் விதம் குறித்து ஜார்கண்ட் பயிற்சியாளர் ராஜிவ் குமார் கூறியதாவது:

பல மாதங்களாக பயிற்சியில் ஈடுபடாவிட்டாலும் அவருடைய பேட்டிங்கில் துளி தடுமாற்றமும் தென்படவில்லை. கடைசியாக நாங்கள் பேசியபோது, ஜனவரியில் பயிற்சியை ஆரம்பிப்பேன் என்றார். சொன்னதுபோலவே ஆரம்பித்துவிட்டார். ஒரு ஜார்கண்ட் கிரிக்கெட் வீரர் எப்படிப் பயிற்சியில் ஈடுபடுவாரோ அதேபோல முனைப்புடன் செயல்பட்டார் தோனி. பேட்டிங் பயிற்சி அருமையாக அமைந்தது. பந்துகள் அழகாக அவருடைய பேட்டின் நடுப்பகுதியில் பட்டுப் பறந்தன. எப்போது மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவார் என்பது குறித்து நான் அவரிடம் பேசவில்லை. ஆனால் ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியை ஆரம்பித்துவிட்டார் தோனி. ஞாயிறு முதல் ஜார்கண்ட் அணி ரஞ்சிப் போட்டியில் விளையாடினாலும் தோனி தன்னுடைய பயிற்சியைத் தொடர்வார். பந்துவீச்சாளர்களிடம் நிறைய பேசி அவர்களுக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.