வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

இரட்டைச் சதம் எடுத்த பெங்களூர் மைதானத்தில் நாளை விளையாடுவாரா ரோஹித்சர்மா?

2013 நவம்பரில் பெங்களூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் 209 ரன்கள் எடுத்தார் ரோஹித் சர்மா...

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:31 pm

எழில்

இந்தியாவுக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. 2-வது ஒருநாள் ஆட்டம் ராஜ்கோட்டில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் குவித்தது. பிறகு விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 49.1 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது ஒருநாள் ஆட்டம் பெங்களூரில் நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில் 2-வது ஒருநாள் ஆட்டத்தில் ஃபீல்டிங் செய்தபோது இந்திய வீரர் ரோஹித் சர்மாவுக்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் பெங்களூரில் நாளை நடைபெறும் 3-வது ஒருநாள் ஆட்டத்தில் ரோஹித் விளையாடுவாரா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

காயம் குறித்து ரோஹித்திடம் விசாரித்தேன். பெரிதளவில் பிரச்னையில்லை. 3-வது ஒருநாள் ஆட்டத்தில் அவர் விளையாடுவார் என கோலி நேற்று பேட்டியளித்தார்.

எனினும் ரோஹித் சர்மாவின் காயத்துக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரு ஒருநாள் ஆட்டங்களுக்கு இடையில் ஒரு நாள் மட்டுமே இடைவெளி இருப்பதால் நாளைய ஒருநாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா விளையாட வேண்டுமா என்கிற கேள்வியும் இன்னொரு பக்கம் எழுந்துள்ளது.

அடுத்த வாரம் இந்திய அணி நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. இதுபோன்று முக்கியமான தொடர்கள் இருப்பதால் காயம் காரணமாக ரோஹித்துக்கு ஓய்வளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

எனினும் பெங்களூர் மைதானம் ரோஹித் சர்மாவுக்கு மிகவும் ராசியான ஒன்று. அந்த மைதானத்தில் ரோஹித் சர்மா விளையாடிய 3 இன்னிங்ஸில் 318 ரன்கள் எடுத்துள்ளார். 1 சதம் மற்றும் 1 அரை சதம். 

2013 நவம்பரில் பெங்களூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் 209 ரன்கள் எடுத்தார் ரோஹித் சர்மா. 2010-ல் நியூஸிலாந்துக்கு எதிரான 44 ரன்களும் 2017-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 65 ரன்களும் எடுத்தார். இதனால் தனக்கு ராசியாக உள்ள மைதானத்தில் மீண்டும் விளையாடவே ரோஹித் சர்மா விரும்புவார் எனத் தெரிகிறது. எனினும் அவர் நாளை விளையாடுவாரா மாட்டாரா என்பது அவருடைய காயத்தின் தன்மை பொறுத்துதான் முடிவெடுக்கப்படும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.