புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

முதல் ஒருநாள் தோல்வி: இந்திய அணிக்கு கங்குலி ஆறுதல்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த இரு ஆட்டங்களும் பரபரப்பாக அமையும். மிகவும் வலுவான அணி நம்முடையது.

News image
Updated On :17 ஜனவரி 2020, 4:56 am

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழக்காமல் இருக்க இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்தியா.

இரு அணிகளுக்கு இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் நடைபெற்று வருகிறது. மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. ஃபிஞ்ச் - வார்னர் ஆகிய இருவரும் அபார சதமடித்து வெற்றிக்கு வித்திட்டனா். 1--0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வி குறித்து பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி ட்விட்டரில் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய அணிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அது அமைந்துள்ளது. அவர் கூறியதாவது:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த இரு ஆட்டங்களும் பரபரப்பாக அமையும். மிகவும் வலுவான அணி நம்முடையது. ஒருநாள் மட்டும் சரியாக விளையாடவில்லை. இதற்கு முன்னால் இதுபோன்ற நிலைமையில் இருந்து, 0-2 என இருந்து தொடரை வென்றுள்ளார்கள். இந்திய அணிக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.