அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

டிரா ஆன ரஞ்சி ஆட்டம்: தமிழக அணிக்கு 3 புள்ளிகள்!

கான்பூரில் நடைபெற்ற ரஞ்சி ஆட்டத்தில் உத்தரப் பிரதேச அணிக்கு எதிராகத் தமிழக அணி 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:23 pm

எழில்

கான்பூரில் நடைபெற்ற ரஞ்சி ஆட்டத்தில் உத்தரப் பிரதேச அணிக்கு எதிராகத் தமிழக அணி 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்நிலையில் 3-ம் நாளின் இறுதியில் உத்தரப் பிரதேச அணி, 65.6 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. இதனால் இரு அணிகளில் எந்த அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறும் என்கிற பரபரப்பு ஏற்பட்டது. 

இன்று ஆட்டம் தொடர்ந்தபோது அங்கித் ராஜ்புத்தை போல்ட் செய்தார் நடராஜன். இதனால் உத்தரப் பிரதேச அணி 175 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தமிழக வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 5 ரன்கள் முன்னிலை பெற்றது.

2-வது இன்னிங்ஸில் தமிழக அணி 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. செளரப் குமார் 2-வது இன்னிங்ஸிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் மொத்தமாக 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் உத்தரப் பிரதேச அணிக்கு 34 ஓவர்களில் 160 ரன்கள் எடுக்க இலக்கு அளிக்கப்பட்டது. எனினும் கடைசி நாளின் ஆட்ட முடிவில் அந்த அணி 7.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் தமிழ்நாடு - உத்தரப் பிரதேசம் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ரஞ்சி ஆட்டம் டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்ஸில் 5 ரன்கள் முன்னிலை பெற்ற தமிழக அணிக்கு 3 புள்ளிகள் கிடைத்தன. உத்தரப் பிரதேச அணிக்கு 1 புள்ளி மட்டும் கிடைத்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.