ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

0,6,6,6,6,6: ஐபிஎல் ஏலத்தில் கேகேஆர் அணி தேர்வு செய்த வீரரின் அதிரடி ஆட்டம்! (விடியோ)

16 பந்துகளில் அரை சதமெடுத்த பாண்டன், பிபிஎல் போட்டியில் 2-வது அதிவேக அரை சதமெடுத்து சாதனையைப் படைத்தார். 

News image
Updated On :6 ஜனவரி 2020, 11:08 am

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் 20 வயது இங்கிலாந்து வீரர் டாம் பாண்டனை ரூ. 1 கோடிக்குத் தேர்வு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. பலரும் பாண்டனின் தேர்வு குறித்து ஆச்சர்யப்பட்டார்கள். இந்நிலையில் பாண்டனை அந்த அணி தேர்வு செய்தது எவ்வளவு சரியானது என இன்று நிரூபணமாகியுள்ளது. 

டாம் பாண்டன், ஆஸ்திரேலியாவின் பிபிஎல் டி20 போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணியில் இடம்பெற்றுள்ளார். இன்று, பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி தண்டர் ஆகிய அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக 8 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. நான்காவது ஓவரை ஆஸ்திரேலியாவின் 21 வயது அர்ஜுன் நாயர் வீசினார். முதல் பந்தில் ரன் எடுக்காத பாண்டன், அடுத்த ஐந்து பந்தைகளையும் சிக்ஸர்களாக மாற்றினார். இதனால் ஒரே ஓவரில் 30 ரன்கள் எடுத்து அசத்தினார். 16 பந்துகளில் அரை சதமெடுத்த பாண்டன், பிபிஎல் போட்டியில் 2-வது அதிவேக அரை சதமெடுத்து சாதனையைப் படைத்தார். பிரிஸ்பேன் ஹீட் அணி 8 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது. 

இதனால் இந்த வருட ஐபிஎல் போட்டியில் டாம் பாண்டனின் அதிரடி ஆட்டத்தையும் ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.