/

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இந்திய வீரர் இர்ஃபான் பதான் ஓய்வு!

அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் அறிவித்துள்ளார்...

News image
Updated On :4 ஜனவரி 2020, 12:11 pm

அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் அறிவித்துள்ளார்.

35 வயது பதான், ஜம்மு - காஷ்மிர் கிரிக்கெட் அணியின் ஆலோசகர் பொறுப்பில் தற்போது உள்ளார். இந்திய அணிக்காக 29 டெஸ்டுகள், 120 ஒருநாள், 24 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்டுகளில் 100, ஒருநாள் கிரிக்கெட்டில் 173, டி20யில் 28 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் கடைசியாக, 2012-ல் விளையாடினார். 

2006-ல் கராச்சி டெஸ்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் பதானும் இடம்பெற்றிருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.