சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

மிகச்சரியான கேப்டன் என யாரும் இல்லை: கோலிக்கு ஆதரவு தரும் ரவி சாஸ்திரி

விராட் கோலியின் தலைமைப் பண்பு குறித்த விமரிசனங்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதில் அளித்துள்ளார்.

News image
Updated On :1 ஜனவரி 2020, 7:05 am

விராட் கோலியின் தலைமைப் பண்பு குறித்த விமரிசனங்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதில் அளித்துள்ளார்.

ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு ரவி சாஸ்திரி அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

மிகச்சரியான கேப்டன் என யாரையும் நான் பார்த்ததில்லை. வெவ்வேறு பலங்கள், பலவீனங்கள் கொண்ட கேப்டன்கள் தான் இருப்பார்கள். ஒரு கேப்டன் ஒரு திட்டத்தில் வலுவாக இருப்பார். இன்னொன்றில் பலவீனமாக இருப்பார். ஆனால் அந்த விஷயத்தில் இன்னொரு கேப்டன் வலுவாக இருப்பார். ஆட்டத்தின் முடிவுகளைத்தான் நீங்கள் காணவேண்டும். 

விராட் கோலி, ஒரு கேப்டனாக நாளுக்கு நாள் முன்னேறி வருகிறார். ஆடுகளத்தில் அவர் கொண்டு வரும் ஆக்ரோஷம், ஆர்வத்தை எவருடனும் ஒப்பிட முடியாது. வேறு எந்த கேப்டனும் அவரளவுக்கு ஆர்வத்தை வெளிப்படுத்துவதில்லை. வரும் காலங்களில் ஒரு கேப்டனாக நிச்சயம் முன்னேற்றம் அடைவார். யார் கேப்டனாக இருந்தாலும் நாளுக்கு நாள் கற்றுக்கொள்ளும் விதமாகத்தான் அவர்களுடைய பணி இருக்கும். முதல் நாளிலிருந்து கற்றுக்கொள்ளத் தேவையில்லை என்கிற நிலையில் எந்த கேப்டனும் இருந்ததில்லை. இதுவரை கோலி தலைமை வகித்த விதம் அபாரம் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.