/

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ரபடா விலகல்!

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர், மார்ச் 12 முதல் தொடங்குகிறது. 

News image
Updated On :29 பிப்ரவரி 2020, 11:48 am

தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபடா, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் ரபடாவுக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அடுத்த நான்கு வாரங்களுக்குச் சிகிச்சை எடுத்து ஓய்வு எடுக்கவேண்டும் என்பதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இந்தியச் சுற்றுப்பயணத்திலும் பங்குபெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியில் தில்லி அணியில் இடம்பெற்றுள்ள ரபடா, மார்ச் 30 அன்று நடைபெறும் அந்த அணியின் முதல் ஆட்டத்தில் பங்கேற்பாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. 

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர், மார்ச் 12 முதல் தொடங்குகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.