மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஜடேஜா போல விளையாட வேண்டும்: ஹாட்ரிக் எடுத்த ஆஸி. பந்துவீச்சாளர் பேட்டி

ஜடேஜாவைப் போல நானும் விளையாட வேண்டும் என விரும்புகிறேன். அவர் ஒரு ராக் ஸ்டார்.

News image
Updated On :22 பிப்ரவரி 2020, 5:26 am

டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த 2-வது ஆஸ்திரேலிய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆஷ்டன் அகர்.

நேற்று நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் 107 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி. இந்த ஆட்டத்தில் ஹாட்ரிக் உள்பட 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார் ஆஷ்டன் அகர். இதன் மூலம் பிரெட் லீ-க்குப் பிறகு ஹாட்ரிக் எடுத்த 2-வது ஆஸ்திரேலிய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். 24 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்த ஆஷ்டன் அகர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவுக்கு எதிரான தொடருக்குப் பிறகு ஜடேஜாவிடம் பேசினேன். கிரிக்கெட் உலகில் எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு வீரர். ஜடேஜாவைப் போல நானும் விளையாட வேண்டும் என விரும்புகிறேன். அவர் ஒரு ராக் ஸ்டார். அதிரடியாக விளையாடுவார், அற்புதமாக ஃபீல்டிங் செய்வார், பந்தை நன்றாக சுழலச் செய்வார். அவர் பேட்டிங் செய்கிறபோது நேர்மறை எண்ணங்களுடன் இருப்பார். அதே எண்ணங்களை ஃபீல்டிங்கிலும் வெளிப்படுத்துவார் என்று பேட்டியளித்துள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.