மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

அப்பாவாகும் குஷியில் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டிலிருந்து விலகும் நியூஸி. வேகப்பந்து வீச்சாளர்

இந்தியா - நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 21 முதல் தொடங்குகிறது.

News image
Updated On :19 பிப்ரவரி 2020, 5:57 am

இந்தியா - நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 21 முதல் தொடங்குகிறது.

நாளை மறுநாள் தொடங்கவுள்ள முதல் டெஸ்டிலிருந்து நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் நீல் வாக்னர் விலகவுள்ளார். அவருடைய முதல் குழந்தை இந்த வாரம் பிறக்கவுள்ளதால் அதன் காரணமாக முதல் டெஸ்டில் வாக்னர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. இதுவரை 47 டெஸ்டுகளில் விளையாடியுள்ள வாக்னர், 204 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 

இதையடுத்து வாக்னருக்குப் பதிலாக மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான மேட் ஹென்றி நியூஸி. அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

முதல் குழந்தை பிறக்கவுள்ளதால் வாக்னர், வெல்லிங்டனுக்குச் செல்ல மாட்டார். குழந்தை பிறக்கும் வரை அவர் தவுரங்காவிலேயே இருப்பார். அவருக்குப் பதிலாக அணியில் ஹென்றி சேர்க்கப்பட்டுள்ளார் என்று நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.