டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஐபிஎல் ஒப்பந்தத்துக்காக விராட் கோலியை ஆஸி. வீரர்கள் பகைத்துக் கொள்வதில்லை: மைக்கேல் கிளார்க் குற்றச்சாட்டு!

ஐபிஎல் ஒப்பந்தத்துக்காக தற்போதைய ஆஸி. வீரர்கள் இந்திய கேப்டன் விராட் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதில்லை...

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:23 pm

எழில்

கோடிக்கணக்கில் சம்பளம் கிடைக்கும் ஐபிஎல் ஒப்பந்தத்துக்காக தற்போதைய ஆஸி. வீரர்கள் இந்திய கேப்டன் விராட் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதில்லை என்று ஆஸி. முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

வருமானத்தின் அடிப்படையில் சர்வதேச அளவிலும் உள்ளூரில் ஐபிஎல் அளவிலும் இந்திய அணி எந்தளவுக்குச் சக்திமிக்கது என்பதை அனைவரும் அறிவோம். ஆஸ்திரேலியாவும் இதர நாடுகளும் குறிப்பிட்ட காலத்தில் இந்திய அணிக்குப் பிடித்தது போல நடந்துகொண்டார்கள். கோலி மற்றும் இந்திய அணி வீரர்களுக்கு எதிராக களத்தில் வாக்குவாதம் செய்ய அஞ்சினார்கள். காரணம், அவர்களுடன் இணைந்துதான் ஐபிஎல்-லில் விளையாட வேண்டும் அல்லவா!

சிறந்த ஆஸ்திரேலிய வீரர்களை ஐபிஎல் அணிக்குத் தேர்வு செய்கிறார்கள். எனவே வீரர்களும், நான் கோலியுடன் வாக்குவாதம் செய்யப்போவதில்லை. அப்போதுதான் அவர் என்னை பெங்களூர் அணிக்கு ஆறு வாரக் காலத்துக்கு 1 மில்லியன் டாலருக்குத் தேர்வு செய்வார் என நினைக்கிறார்கள் என்று கிளார்க் கூறியுள்ளார்.  

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 13-ஆவது சீசன் போட்டிகள் ஏப். 15-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.