தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்துடன் விளையாட விருப்பமா?

விஸ்வநாதன் ஆனந்த் உள்பட பிரபல வீரர்கள், இணையம் வழியாக ரசிகர்களுடன் செஸ் விளையாட்டில் ஈடுபட்டு கரோனா நிவாரணத்துக்கு நிதி திரட்டவுள்ளார்கள்.

News image
Updated On :6 ஏப்ரல் 2020, 10:41 am

விஸ்வநாதன் ஆனந்த் உள்பட பிரபல வீரர்கள், இணையம் வழியாக ரசிகர்கள் மற்றும் வீரர்களுடன் செஸ் விளையாட்டில் ஈடுபட்டு கரோனா நிவாரணத்துக்கு நிதி திரட்டவுள்ளார்கள்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 69,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 4,200 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் ஒரு பேட்டியில் கூறியதாவது: ஏப்ரல் 11 அன்று இந்திய செஸ் வீரர்கள், ரசிகர்களுடன் செஸ் விளையாட்டில் ஈடுபட்டு கரோனா நிவாரணத்துக்கு நிதி திரட்டவுள்ளோம் என்று கூறியுள்ளார். கரோனா அச்சுறுத்தல் மற்றும் இந்தியாவில் நிலவும் ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்போது ஜெர்மனியில் உள்ளார் ஆனந்த்.

விஸ்வநாதன் ஆனந்த், ஹம்பி, அதிபன், விதித் குஜ்ராத்தி, ஹரிகா போன்ற இந்திய செஸ் வீரர்கள், chess.com என்கிற இணையத்தளம் வழியாக ஏப்ரல் 11 அன்று இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு வீரர்கள் மற்றும் ரசிகர்களுடன் செஸ் விளையாட்டில் ஈடுபடவுள்ளார்கள். இதன்மூலம் திரட்டப்படும் நிதி, இந்தியப் பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும். இதில் கலந்துகொள்ள ஆர்வமுள்ள ரசிகர்கள், பதிவுக்கட்டணமாக ரூ. 1902 (25 டாலர்) செலுத்தவேண்டும். இதன்பிறகு முதல் ஆறு இடங்களில் உள்ள இந்திய வீரர்களில் இருவருடன் அவர்கள் விளையாடலாம். விஸ்வநாதன் ஆனந்துக்கு எதிராக விளையாட வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ரூ. 11,412 (150 டாலர்) வழங்கவேண்டும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை, chess.com என்கிற இணையத்தளத்தில் அறியலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.