பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

மணீஷ் பாண்டே அதிரடி ஆட்டம்: ஒருநாள் தொடரை வென்றது இந்திய ஏ அணி!

5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய ஏ அணி, 3-0 என முன்னிலை பெற்றுள்ளது... 

News image
Updated On :2 செப்டம்பர் 2019, 12:20 pm

தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய ஏ அணி வென்றுள்ளது.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 3-வது அதிகாரபூர்வமற்ற ஒருநாள் ஆட்டத்தில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி, 30 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. கிளாசென் 21 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்தார். 

சற்று கடினமான இலக்கை இந்திய ஏ அணியினர் நன்கு எதிர்கொண்டார்கள். தொடக்க வீரர் இஷான் கிஷன் 40 ரன்கள் எடுத்தார். கேப்டன் மணீஷ் பாண்டே அதிரடி ஆட்டத்தால் இந்திய ஏ அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமானார். 59 பந்துகளில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுத்தார். கடைசிக்கட்டத்தில் ஷிவம் டுபே, 28 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்து இந்திய ஏ அணி சிரமம் இன்றி வெற்றி பெற உதவினார். இதனால் இந்திய ஏ அணி 27.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்து 3-வது ஆட்டத்தை வென்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.

5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய ஏ அணி, 3-0 என முன்னிலை பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.