அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

கொல்கத்தா பகலிரவு டெஸ்ட்: ஆட்ட நேர விவரங்கள்!

கொல்கத்தா டெஸ்டின் ஆட்ட நேர விவரங்களை ஈடன் கார்டன்ஸ் ஆடுகள வடிவமைப்பாளர் சுஜன் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 அக்டோபர் 2019, 7:12 am

பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலியின் தீவிர முயற்சியால் முதல்முறையாக வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெறவுள்ள பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கிறது. நவம்பா் 22-ம் தேதி கொல்கத்தா ஈடன் காா்டன் மைதானத்தில் நடைபெறவிருந்த வங்கதேச அணியுடனான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. இதன்மூலம் இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாகப் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்கிறது. 

இந்நிலையில் கொல்கத்தா டெஸ்டின் ஆட்ட நேர விவரங்களை ஈடன் கார்டன்ஸ் ஆடுகள வடிவமைப்பாளர் சுஜன் முகர்ஜி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: 

பகலிரவு டெஸ்ட் மதியம் 1 மணிக்குத் தொடங்கலாம். ஆட்டம் முன்னதாகத் தொடங்கப்படுவதால் இரவு 8-8.30 மணிக்கு முடிந்துவிடும். இதற்குப் பிறகு தான் கொல்கத்தாவில் பனிப் பொழிவு உண்டாகும் என்பதை நாம் ஒரு நாள் ஆட்டங்களிலேயே பார்த்துள்ளோம். எனவே பனிப் பொழிவு காரணமாக டெஸ்ட் ஆட்டத்துக்குப் பிரச்னை எதுவும் இருக்காது. அப்படியே பனிப் பொழிவு ஏற்பட்டாலும் அதைச் சரிசெய்ய தகுந்த ஏற்பாடுகளுடன் உள்ளோம் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.